Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நபர் ஒருவர் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 21 ஆவது தடவையாக தண்டிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

அதிக எண்ணிக்கையில் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட கனடிய நபராக குறித்த நபர் கருதப்படுகின்றார்.

மது போதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்துக்களை மேற்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபருக்கு எதிராக பல தடவைகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து மேற்கொண்ட குற்றத்திற்காக ரோய் ஹைட் என்பவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.