கனடாவில் பூமாலை (pollen) அலர்ஜியால் பாதிக்கப்படும் மக்களுக்கு 2026ஆம் ஆண்டில் வாழ்வதற்கு மிகவும் சவாலான நகரமாக விண்ட்சர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவா அடிப்படையிலான ஏரோபயோலொஜி Aerobiology ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி, கனடாவில் சுமார் 80 லட்சம் முதல் 1 கோடி மக்கள் வரை (ஐந்தில் ஒருவர்) மரங்கள், புல்வெளிகள் மற்றும் களைகள் மூலம் பரவும் பூமாலை அலர்ஜியால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் மூக்கடைப்பு, நீர்வடிவு, தும்மல், இருமல் மற்றும் கண் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஆய்வு தரவரிசை, பூமாலை பரவும் கால அளவு மற்றும் அதிக அல்லது மிக அதிக அளவிலான காற்றில் பரவும் பூமாலை நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அதிக பாதிப்பு உள்ள நகரங்கள் (2026)
- விண்ட்சர்
- ஹாமில்டன்
- பேரி
- விக்டோரியா
- கிங்ஸ்டன்
ஆய்வில் குறிப்பிடப்பட்டதாவது, விண்ட்சர் நகரத்தில் சுற்றியுள்ள அடர்ந்த தாவர வளம், காலநிலை நிலைமைகள் மற்றும் அதிக அளவில் அலர்ஜி ஏற்படுத்தும் மரங்கள் (பர்ச், ஓக், ராக்வீட்) இருப்பதால் பூமாலை பரவல் அதிகமாக இருப்பதாகும்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.