Reading Time: < 1 minute

றொரன்டோவின் ஒன்றாரியோ ஏரியில இடம்பெற்ற படகு விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

Tamil Business Directory

ஒன்றாரியோ ஏரியீல் இரவு வேளையில் படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய எட்டு பேர் உயிரிடன் மீட்கப்பட்ட போதிலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் றொரன்டோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

துறைமுகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த குறித்த படகு அலைதாங்கியொன்றின் கற்பாறை மீது மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் மொத்தம் 10 பேர் பயணித்துள்ளதாகவும் அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த படகு விபத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.