Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஒட்டாவாவில் குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலதிக தகவல்கள் சிறப்பு புலனாய்வு பிரிவில் இருந்து வரும் என்று ஒட்டாவா பொலிஸார் விளக்கம் அளித்தனர்.
ஜாஸ்மின் கிரெசெண்டின் 2000 தொகுதிகளில் உள்ள குடியிருப்பில் இருந்து நேற்று (புதன்கிழமை) ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 23 வயது இளைஞன் என தெரிவித்துள்ள ஒன்றாரியோவின் பொலிஸ் கண்காணிப்புக் குழு, இதுகுறித்து கூடுதல் விபரங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.




