Reading Time: < 1 minute

ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 63 கனேடியர்களும் அடங்குவதாக உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் வடிம் பிரிஸ்ரைகோ (Vadym Prystaiko) தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

இவ்விபத்தில் ஈரான், உக்ரைன், சுவீடன், ஆப்கானிஸ்தான், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் பிரஜைகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்குச் சொந்தமான போயிங்-737 என்ற விமானம் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது. மேலும் இயந்திரக் கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.