Reading Time: < 1 minute

அமெரிக்காவின் மேற்கு கடற்கரை முழுவதும் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயினால், கனடாவின் சில பகுதிகளுக்கு காற்றின் தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

புகை எல்லைக்கு வடக்கே நோக்கி நகர்வதால், கனேடிய சுற்றுசூழல் திணைக்களம் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

மேற்கு அமெரிக்காவில் காட்டுத்தீயில் இருந்து நீண்ட தூர போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை தாக்கங்கள் ஏற்கனவே வன்கூவர் தீவு, கீழ் மெயின்லேண்ட் மற்றும் உட்புறத்தின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.

உலக காற்றின் தரக் குறியீட்டின்படி, உலகின் மிக மோசமான காற்றின் தரம் கொண்ட நகரங்களின் பட்டியலில் வன்கூவர் இரண்டாவது இடத்தில் உள்ளது, போர்ட்லேண்ட் முதலிடத்தில் உள்ளது. அல்பர்ட்டாவுக்கு இன்னும் காற்றின் தர எச்சரிக்கை வெளியிடப்படவில்லை.

சுற்றுச்சூழல் கனடாவின் காற்றின் தர சுகாதார அட்டவணை காற்றின் தரத்தை ஒன்றின் அளவிலிருந்து (குறைந்த ஆபத்து) 10 (மிக அதிக ஆபத்து) ஆக அளவிடுகிறது.

கடும் புகை நிலையை அனுபவிக்கும் பகுதிகளில் உள்ள கனடியர்கள் வெளிப்புற செயற்பாடுகளை மட்டுப்படுத்தவும், தண்ணீர் குடிக்கவும், வீடுகள் மற்றும் வாகனங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.