Reading Time: < 1 minute குரங்கம்மை நோய் தொற்று பரவுகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை தொற்று குறித்து பரிசோதனைகளை நடத்துமாறு பொதுச் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். கடந்த ஜனவரி முதல் மாகாணத்தில் 26 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டில் மொத்தமாகவே 33 குரங்கம்மை நோயாளர்களே மாகாணத்தில் பதிவாகியிருந்தனர். ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பிரதமர் ஜஸ்ரின்ட் ட்ரூடோ உள்ளிட்ட அரசியல்வாதிகளின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் வருடாந்த சம்பளத் தொகை 400,000 டொலர்களை விட அதிகமாக உயர்த்தப்பட உள்ளது. மத்திய அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் சம்பளங்களும் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பியோ பொலியேவின் வருடாந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் உலகில் பூரண சூரிய கிரகணம் ஒன்று ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கையில் ஒரு தடவை பார்கக்கூடிய இந்த அரிய சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பூரண சூரிய கிரகணம்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளங்கள் அதிகரிக்கப்பட உள்ளது. மாகாணத்தின் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 65 சதங்களினால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி முதல் இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்படி தற்பொழுது மணித்தியாலம் ஒன்றுக்கு வழங்கப்படும் 16.55 டொலர் சம்பளம் 17.20 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது. நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில் 3.9 வீதமாக சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வீட்டில் வளர்க்கப்பட்ட இராட்சத பாம்பு ஒன்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் வனவிலங்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறித்த பாம்பினை மீட்டுள்ளனர். ஒன்பது அடி நீளமான இராட்சத மலைப்பாம்பு ஒன்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. கனடாவில் தனிச்சிறப்புடைய விலங்கினங்கள் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த பாம்பினை வீட்டில் வளர்த்த நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளது. சட்டவிரோதமான முறையில் இவ்வாறு விலங்குகளை வீட்டில் வளர்ப்பதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் ஏதிலி அந்தஸ்து கோரும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டிலிருந்து 2023ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் ஒன்றாரியோ கிட்சனர் கொனெஸ்டோகா கல்லூரியில் ஏதிலி அந்தஸ்து கோரிய சர்வதேச மாணர்களின் எண்ணிக்கை 324 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் 106 மாணவர்கள் ஏதிலி அந்தஸ்து கோரியதாகவும், 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 450 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாடு திரும்பினால், தாய் நாட்டில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மீனவர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 64 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவின் மெரால் சியாசன் என்ற மீனவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் பெருந்தொகை பணத்தை வென்றெடுத்துள்ளார். இந்த லொத்தர் சீட்டு காலாவதியாக இன்னமும் 19 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் பரிசுத் தொகையை பெற்றுக்கொண்டுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி இந்த லொத்தர் சீட்டுக்கான சீட்லுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஏனைய லொத்தர் சீட்டுக்களைப்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் தனது பெற்றோரை படுகொலை செய்ததாக மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் கென் கெதரீன்ஸ் பகுதி வீடொன்றில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. வயது முதிர்ந்த தம்பதியினரின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டிருந்தது. 43 வயதான சீன் ஓவன்ஸ் என்ற நபரை நயகரா பொலிஸார் கைது செய்துள்ளனர். மேரி ஓவன்ஸ் மற்றும் ஹரோல்ட் ஓவன்ஸ் ஆகிய இருவரையும் இந்த நபர் படுகொலை செய்துள்ளார் என குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சமூக ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பாடசாலை சபைகளினால் முன்னணி சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் நான்கு பிரதான பாடசாலை சபைகள் இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளன. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டொக் மற்றும் ஸ்னெப்செட் ஆகிய சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த சமூக ஊடகங்கள் சிறுவர்களை எதிர்மறையாக சிந்திக்கத் தூண்டும் வகையில் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute மரணத்தின் பின்னரான வாழ்வு குறித்து நாம் அனைவர் மத்தியிலும் பல்வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. மத நம்பிக்கைகளின் அடிப்படையில் மரணத்தின் பின்னரான வாழ்வு குறித்து மக்கள் மத்தியல் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. அந்த வகையில் பெரும் எண்ணிக்கையிலான கனடிய மக்கள் மரணத்தின் பின்னரான வாழ்வு உண்டு என கருத்து வெளியிட்டுள்ளனர். அன்கு;ஸ் ரெய்ட் என்ற நிறுவனத்தினால் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின் அடிப்படையில் பல கனடியர்கள் மரணத்தின் பின்னரானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் வருமான முகவர் நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்ட பணியாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். கோவிட் பெருந்தொற்று காலப் பகுதியில் மோசடியான முறையில் நலன்புரிக் கொடுப்பனவு பெற்றுக் கொண்டவர்களே இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளனர். கடந்த 15ம் திகதி வரையிலான காலப் பகுதியில் கனடிய வருமான முகவர் நிறுவனத்தைச் சேர்ந்த 232 பேர் பணி நீக்கப்பட்டுள்ளனர். கனடிய அவசர நிவாரணத் திட்டத்தின் கீழ் கொடுப்பனவு பெற்றுக்கொண்டவர்களே பணி நீக்கப்பட்டுள்ளனர். பெருந்தொற்று காரணமாக சுகாதார கட்டுப்பாடுகள்Read More →

Reading Time: < 1 minute டொமினிகன் குடியரசு விமான நிலையத்தில் கனேடிய இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த அவமதிப்பு தொடர்பான செய்தி ஒன்று கொந்தளிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. டொமினிக்கன் குடியரசு என்னும் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த கனேடிய இளம்பெண் ஒருவர், வாழ்வில் மறக்கமுடியாத வகையில் அவமதிக்கப்பட்டுள்ளார். கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Burlingtonஐச் சேர்ந்த நடாஷா (Natasha Marques, 23), தனது தோழி ஒருவருடன் டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஒரு வாரம் மகிழ்ச்சியாக கடந்த நிலையில், மீண்டும் கனடாRead More →

Reading Time: < 1 minute கனடாவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது. கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த வருடம், நாடு முழுவதிலும் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது. இதுவரையில் இந்த ஆண்டில் நாடு முழுவதிலும் 40 தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசி உரிய நேரத்தில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சரியான முறையில் நேர்மையாக வாடகை செலுத்துவோருக்கு நலன்களை வழங்கு சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனடிய மத்திய அரசாங்கம் இந்த புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மாதாந்தம் 2000 டொலர் வாடகை செலுத்துவோருக்கு கிடைக்காத சலுகைகள் அடகுக் கடன் தவணை செலுத்துவோருக்கு கிடைக்கப் பெறுவதாகத்Read More →

Reading Time: < 1 minute கனடாவின், சஸ்கற்றுவானில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. தென் சஸ்கற்றுவானின் கிராமிய வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடிய பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் வயது வந்தவர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் மரணங்கள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் அடிப்படை மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதில் மேலும் நெருக்கடி நிலைமைகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் சுமார் ஆறு மில்லியன் மக்கள் குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதிக எண்ணிக்கையிலான கனடியர்களினால் குடும்ப மருத்துவரின் அடிப்படை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதன் போது குடும்ப மருத்துவர்கள் வேறும் சேவைகளில் ஈடுபடுவதில் நாட்டம் காட்டத் தொடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. குடும்ப மருத்துவர்கள் ஏதேனும்Read More →