Reading Time: < 1 minute திங்கட்கிழமையன்று சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த பனிப்பாறைச்சரிவில் கனேடிய இளம்பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். திங்கட்கிழமையன்று, சுவிட்சர்லாந்திலுள்ள Valais மாகாணத்திலுள்ள Zermatt என்னுமிடத்திலுள்ள பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றினருகில் பனிப்பாறைச்சரிவு ஏற்பட்டது. அதில், மூன்று பேர் கொல்லப்பட்டார்கள். உயிரிழந்தவர்களில் ஒருவர் கனடா நாட்டவரான இளம்பெண் என சுவிஸ் பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள். அவருடன் 15 வயது அமெரிக்க இளைஞர் ஒருவரும், 58 வயதான சுவிஸ் நாட்டவர் ஒருவரும் கூட பனிப்பாறைச்சரிவில் சிக்கிRead More →

Reading Time: < 1 minute கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, 2024ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல், குறிப்பிட்ட நிரந்தரக் குடியிருப்பு (PR) கட்டணங்களை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது . கனடாவின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி(IRPR) இந்த கட்டண உயர்வு அறிமுகப்படுத்தப்படுவதாக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிப்பவர் மற்றும் அவரது கணவன் அல்லது மனைவிக்கான கட்டணம்Read More →

Reading Time: < 1 minute கனடா (Canada) செல்லும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார். தற்காலிக விசாவில் நாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு கனடாவின் மக்கள் தொகையில் 2 சதவீதமானவர்களே தற்காலிக குடியேறியவர்களாகும். விசிட்டர் விசாகனேடிய மக்கள் தொகையில் 7.5 சதவீதம் பேர் தற்காலிகமாக குடியேறியவர்களாகும். இது நாம் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டிய ஒன்றென பிரதமர்Read More →

Reading Time: < 1 minute முதல்வர் டக் போர்ட் தலைமையிலான ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் நான்கு ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்ய உள்ளது. பொலிஸாரின் பயன்பாட்டுக்காக இந்த ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார் கொள்ளைகளை தடுப்பதற்கும், காணாமல் போனவர்களை தேடுவதற்கும் இந்த நான்கு ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட உள்ளன. ரொறன்ரோ, பீல், ஹால்டன் மற்றும் டர்ஹம் பிராந்திய பொலிஸார் இணைந்து ஹெலிகொப்டர் பொலிஸ் சேவையை வழங்க உள்ளனர். இந்த ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கு 36 மில்லியன்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் நாய்களின் தாக்குதலுக்கு இலக்கான 11 வயதான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். கனடாவின் தென்கிழக்கு எட்மோன்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு பெரிய நாய்கள் குறித்த சிறுவனை கடித்து குதறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாய் கடிக்கு இலக்காகிய சிறுவன் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது படுகாயமடைந்த சிறுவானை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு நாய்களையும்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரெறான்ரோவில் அவசரமாக தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை நோய்த் தாக்கம் காரணமாக இவ்வாறு அவசரமாக தடுப்பூசி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் இவ்வாறு தடுப்பூசி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி நிலையங்கள் மற்றும் அவற்றில் எவ்வாறு சேவையை பெற்றுக்கொள்வது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொதுச் சுகாதார சேவையின் இணைய தளத்தில் விபரங்களைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் முதலான அனைத்து கருத்தடை சாதனங்களும் இலவசமாக்கப்பட உள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. பெண்கள் தங்களுக்குத் தேவையான கருத்தடை சாதனங்களைப் பெற பணம் தடையாக இருக்கக்கூடாது, கருத்தடை முறைகளை அவர்கள் சுதந்திரமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ. ஆகவே, கருத்தடை சாதனங்களை இலவசமாக்க உள்ளோம் என எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அவர். அத்துடன், கனடா துணைRead More →

Reading Time: < 1 minute காசாவில் நிவாரணப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கனடா கண்டனம் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய படையினர் நிவாரணப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தி வேர்ல்ட் சென்ட்றல் கிட்சன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலிவுவிலை வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படாவிட்டால் நிதியீட்டம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாண அரசாங்கம் வீடமைப்பு திட்டத்தை உரிய திட்டமிடலுடன் முன்னெடுக்கத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் வீடமைப்புத்துறை அமைச்சர் சேன் ப்றேசர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஏனைய அனைத்து மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களை விடவும் ஒன்றாரியோ பின்னிலை வகிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில், வரும் கல்வியாண்டிலிருந்து, மாணவ மாணவியருக்கு மதிய உணவு வழங்க பெடரல் அரசு முடிவு செய்துள்ளது. நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் துவக்கம் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவோம், பள்ளிக்கு வரும் ஒரு பிள்ளை, எனக்கு பசிக்கிறது என்று கூறுமானால், பள்ளி என்னும் சமுதாயம் மற்றும் நாடு என்னும் முறையில், நாம் எல்லோரும் செய்யவேண்டிய வேலை இன்னமும் நிறைய இருக்கிறது என்று பொருள் என்று கூறியுள்ளார் கனடா பிரதமரானRead More →

Reading Time: < 1 minute கனடிய மத்திய அரசாங்க ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முதல் இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கனடிய மத்திய அரசாங்க ஊழியர்களின் ஒரு மணித்தியால சம்பளம் அதிகரிக்கப்படும் என லிபரல் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. இதன் அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளம் 65 சதங்களினால் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முதல் மத்திய அரசாங்கப் ஊழியர் ஒருவரின் மணித்தியாலம் ஒன்றுக்கான சம்பளம் 17.30 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகரித்துச் செல்லும் பணவீக்கத்தினை சீராக்கும் நோக்கில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கார்பன் வரி அதிகரிப்பின் எதிரொலியாக எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தி;ல் எரிபொருளுக்கான விலைகள் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய முதல் நாட்டில் கார்பன் வரி ஒரு தொன்னுக்கு 15 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 3.3 சதங்களினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 4 சதங்களினாலும் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரம்டனில் வீதியொன்றில் வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர். கடந்த புதன்கிழமை பிரம்டனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஈகள்ரிட்ஜ் மற்றும் டோர்பிராம் வீதிகளுக்கு அருகாமையில் வாகமொன்றில் சென்ற நபரை மற்றுமொரு வாகனத்தில் சென்றவர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்துடன் நான்கு இளைஞர்களுக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது. மோதலில் ஈடுபட்ட 28 வயதான ஆகாஸ்டீப் சிங் மற்றும் 23 வயதான ராமன்பிரீட் மாசியா ஆகியோரை பொலிஸார் அடையாளம்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறொன்ரோவில் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் பல்வேறு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் விமானத்தில் இருந்து வந்த ஹினா சானி என்ற விமானப் பணிப்பெண்ணின் பயணப் பையில் பல்வேறு நபர்களின் கடவுச்சீட்டுகள் இருந்ததைக் கண்டு ரொறன்ரோவில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். மேலும்Read More →

Reading Time: < 1 minute கனடா – ரொறன்ரோ பெரும்பாக பகுதியானது பொருளாதார செயற்பாடுகள், கலாச்சார பல்வகைமை, புத்தாக்கம் போன்ற காரணங்களினால் அதிகளவில் கேள்வியுடைய தொழில்கள் பற்றிய விபரங்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிக கேள்வியுடைய தொழில்கள்ரொறன்ரோவில் சராசரி சம்பளங்களும் தொழில் வாய்ப்புக்களும் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டில் ரொறன்ரோ பகுதியில் அதிகளவு கேள்வி நிலவும் பத்து தொழிற்துறைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சம்பளம்2023 செப்டம்பரில், கனடாவின் வேலைச் சந்தை குறிப்பிடத்தக்கRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட உலகின் மிகவும் வயது மூத்தவர் என்ற உலக சாதனையை வோல்டர் டவுரோ என்பவர் நிலைநாட்டியுள்ளார். ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வசித்து வரும் 88 வயதான வோல்டருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் சென் மைக்கல்ஸ் வைத்தியசாலையில் 87 வயதாகRead More →