Reading Time: < 1 minute கனடாவின், சஸ்கற்றுவானில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. தென் சஸ்கற்றுவானின் கிராமிய வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடிய பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் வயது வந்தவர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் மரணங்கள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினும், இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் அடிப்படை மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதில் மேலும் நெருக்கடி நிலைமைகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் சுமார் ஆறு மில்லியன் மக்கள் குடும்ப மருத்துவர்களின் சேவையை பெற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதிக எண்ணிக்கையிலான கனடியர்களினால் குடும்ப மருத்துவரின் அடிப்படை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதன் போது குடும்ப மருத்துவர்கள் வேறும் சேவைகளில் ஈடுபடுவதில் நாட்டம் காட்டத் தொடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. குடும்ப மருத்துவர்கள் ஏதேனும்Read More →

Reading Time: < 1 minute தானியங்கி அடிப்படையில் வரி கோப்புக்களை பதிவு செய்வதாக கனடிய மத்திய அரசாங்கம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வரித்துறைசார் நிபுணர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். வரிச் செலுத்துகைக்கு உட்படாதவர்களின் விபரங்களைக் கொண்டு அரசாங்கம் தானாகவே வரிக் கோப்புக்களை பதிவு செய்யும் பரீட்சார்த்த முயற்சி குறித்து அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும், இந்த உறுதிமொழி இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் எரிபொருளுக்கான வரிச் சலுகையை நீடித்துள்ளது. பெற்றோல் மற்றும் எரிபொருட்களுக்கான வரிச் சலுகை இந்த ஆண்டு இறுதி வரையில் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் பெற்றோலுக்கான வரி 5.7 சதத்தினாலும், ஏனைய எரிபொருட்களுக்கான வரியும் ஒரு லீற்றருக்கு 5.3 சதத்தினாலும் குறைக்கப்பட்டிருந்தது. இந்த வரிக்குறைப்பு நடைமுறை எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதியுடன் காலாவதியாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வரிச் சலுகை இந்த ஆண்டு டிசம்பர் மாதம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் 34 மில்லியன் வரி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் பிரம்டனைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பாரியளவில் மோசடி செய்துள்ளார். அறக்கட்டளைக்கான நன்கொடை என்ற பெயரில் சுமார் 34 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டுள்ளது. பெஸ்டுயுஸ் பெய்ன்டன் என்ற நபரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த பாரிய வரி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவின் கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து மூன்றாண்டுகளுக்கு வரையறுக்கப்பட உள்ளது. நேற்று முதல் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் பழமையான இந்த பாதை பழுதுபார்க்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்றாண்டுகள் இந்தப் பாதை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையின் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தைப் பயன்படுத்துவோர் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் வெளிநாட்டவர்களுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் நிரந்தர வதிவுரிமை பெறுவது குறித்த ஓர் வழிமுறை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் விருந்தோம்பல் தொழிற்துறையில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன. எதிர்வரும் 2035ம் ஆண்டளவில் மாகாணத்தின் சுற்றுலா கைத்தொழிற்துறையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அல்பேர்ட்டா மாகாணம் இதற்கென பிரத்தியேகமான ஓர் குடிவரவு திட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது. விருந்தோம்பல் தொழிற்துறைசார் தகுதியுடைய வெளிநாட்டவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் இந்த புதியRead More →

Reading Time: < 1 minute கனடா அமெரிக்க எல்லையில் குழந்தைகள் உட்பட இந்தியக் குடும்பம் ஒன்று குளிரில் உறைந்து பலியான சம்பவம் நினைவிருக்கலாம். 2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் குளிரில் உறைந்துRead More →

Reading Time: < 1 minute கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு நிரந்தர வதிவிட உரிமைக்கான கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கனடாவில் தற்காலிகமாக வதியும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்கும் போது கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தொழில் தகமை, பிரெஞ்சு மொழித் திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தற்காலிகமாக வதிவோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. தொழில் மற்றும் கல்விRead More →